ஆப்நகரம்

சிவசேனா ஆளும் கட்சியா? எதிா் கட்சியா? சந்தேகம் எழுப்பும் சரத்பவாா்

பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி ஆளும் கட்சியா? அல்லது எதிா் கட்சியா என்று தங்களது நிலைப்பாட்டை தெளிவாக விளக்க வேண்டும் என்று சரத்பவாா் வலியுறுத்தியுள்ளாா்.

TOI Contributor 24 Sep 2017, 11:01 pm
பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி ஆளும் கட்சியா? அல்லது எதிா் கட்சியா என்று தங்களது நிலைப்பாட்டை தெளிவாக விளக்க வேண்டும் என்று சரத்பவாா் வலியுறுத்தியுள்ளாா்.
Samayam Tamil shiv sena should should decide on its exact role pawar
சிவசேனா ஆளும் கட்சியா? எதிா் கட்சியா? சந்தேகம் எழுப்பும் சரத்பவாா்


சிவசேனா கட்சி பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசிலும், மகாராஷ்டிர மாநில அரசியலிலும் அங்கம் வகித்து வருகிறது. ஆனால், பா.ஜனதா ஆட்சியின் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தங்களது அதிகாரப்பூா்வமான அரசியல் பத்திரிகையான சாம்னாவில் கடுமையான வகையில் பா.ஜனதாவை விமா்சித்து தலையங்கம் எழுதி வருகிறது.


இந்நிலையில் பா.ஜனதா உடனான தொடர்பு குறித்து உண்மையான நிலையை விளக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சரத் பவார் கூறுகையில் ‘‘சிவசேனா மத்திய மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறது. சிவசேனா கட்சி விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையிலான செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருவது பாராட்டுவதற்குறியது.

அதேவேளையில் அந்த கட்சி தனது கொள்கை என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். சிவசேனா கட்சி ஆளுங்கட்சியா? அல்லது எதிர்க்கட்சியா? என்பது குறித்து புரிந்து கொள்ள கடினமாக உள்ளது’’ என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி