நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் நலனுக்காகத் திருப்பதி சென்று அங்கு சாமிதரிசனம் செய்து தனது பிரார்த்தனையைக் கூறி மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வழிப்பாட்டு நடத்தினார்.
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் திருப்பதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக முதல்வருக்கு சேனிட்டைசர் வழங்கப்பட்டு அதன்பின் மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஐபி பங்களாவில் தங்க வைக்கப்பட்ட முதல்வர் சிவ்ராஜ் இன்று திருப்பதி கடவுளைத் தரிசனம் செய்தார். தொடர்ந்து திருப்பதி கோயில் எதிரில் இருக்கும் நாத நீராஞ்சன மண்டபத்தில் நடைபெற்று வரும் சுந்தர காண்ட பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
திருப்பதி: இறந்தவரின் உடலை டிராக்டரில் கொண்டுச் செல்லும் அவலம்..!
இதன்பின் நிருபர்களிடம் சிவ்ராஜ் சிங் சவுஹான், கூறுகையில், “கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட்டு நாடு நலம் பெற வேண்டுமென ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் சுந்தர காண்ட பாராயண நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொரோனா வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். நம்முடைய ராணுவம் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், நாடு செழிப்படைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் திருப்பதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக முதல்வருக்கு சேனிட்டைசர் வழங்கப்பட்டு அதன்பின் மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஐபி பங்களாவில் தங்க வைக்கப்பட்ட முதல்வர் சிவ்ராஜ் இன்று திருப்பதி கடவுளைத் தரிசனம் செய்தார். தொடர்ந்து திருப்பதி கோயில் எதிரில் இருக்கும் நாத நீராஞ்சன மண்டபத்தில் நடைபெற்று வரும் சுந்தர காண்ட பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
திருப்பதி: இறந்தவரின் உடலை டிராக்டரில் கொண்டுச் செல்லும் அவலம்..!
இதன்பின் நிருபர்களிடம் சிவ்ராஜ் சிங் சவுஹான், கூறுகையில், “கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட்டு நாடு நலம் பெற வேண்டுமென ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் சுந்தர காண்ட பாராயண நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொரோனா வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். நம்முடைய ராணுவம் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், நாடு செழிப்படைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.