ஆப்நகரம்

மத்தியப் பிரதேச முதல்வர் சவுகான் உண்ணாவிரதம் இன்று நிறைவு?

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நிறைவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

TNN 11 Jun 2017, 9:20 am
மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நிறைவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil shivraj singh chouhan likely to end fast today protesters rigid on 50 msp hike
மத்தியப் பிரதேச முதல்வர் சவுகான் உண்ணாவிரதம் இன்று நிறைவு?


விவசாயிகள் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், அமைதி ஏற்பட வலியுறுத்தி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

போபால் நகரில் உள்ள தஸரா மைதானத்தில் அவரது போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், ஏராளமான ஆதரவாளர்கள், அங்கு முகாமிட்டுள்ளனர். மேலும், தலைமைச் செயலகப் பணிகள் அனைத்தும், உண்ணாவிரத மேடையில் இருந்தபடியே நடைபெறும் என்றும், சிவ்ராஜ் சிங் சவுகான் கூறிவருகிறார்.

இந்நிலையில், தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவர், இன்றைக்குள் தனது போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறவில்லை. அவர்களின் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. ஆனால், முதல்வர் சவுகான், வீண் விளம்பரத்திற்காக, உண்ணாவிரதப் போராட்டத்தை, தொடங்கிவிட்டு, அவரே முடித்துக் கொள்வது நியாயமற்ற செயல் என, எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

While speaking to NDTV late on Saturday, Chouhan said, “I may end my fast tomorrow.” The chief minister further added that he is hopeful of striking a negotiation with the aggrieved farmers at the earliest.

அடுத்த செய்தி