ஆப்நகரம்

ஆண்களே வயிறு வலியா? உடனே கர்ப்ப பரிசோதனை செஞ்சிடுங்க- ஷாக் கொடுத்த அரசு மருத்துவர்!

வயிறு வலி என்று அரசு மருத்துவரிடம் சென்ற ஆண்களுக்கு, கர்ப்ப பரிசோதனை செய்ய பரிந்துரைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Oct 2019, 11:19 am
திருமணமான பெண்களுக்கு வாந்தி, மயக்கம், அதிகமாக பசி எடுக்கிறது என்றால் உடனே மருத்துவரை அணுகுவார்கள். அப்போது கர்ப்ப பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படும்.
Samayam Tamil Doctor


இதே போன்ற சூழ்நிலை ஆண்களுக்கு ஏற்பட்டால், வயிற்று வலிக்கு தக்க மருந்துகளை வழங்குவர். அதேசமயம் ஆண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அமித் ஷா உடல்நிலைக்கு திடீர்னு என்ன ஆச்சு? பிரச்சார கூட்டங்களுக்கு மாற்று ஏற்பாடு!

ஆம். அப்படியொரு சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த கோபால் கஞ்சு, காமேஸ்வர் ஜான்ஹூ ஆகியோருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் முகேஷ் குமார். இவர் இருவரையும் பரிசோதித்து விட்டு, உடனே கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

சபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காணும் தமிழர்கள் !!

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும், இதுபற்றி அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவரிடம் புகார் அளித்துள்ளனர். அவர் உடனே விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்று மருத்துவர் முகேஷ் விசித்திரமாக நடந்து கொள்வது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதம் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக வந்துள்ளார். அவரை கருத்தடை சாதனத்தை பயன்படுத்துமாறு கூறியுள்ளார்.

இந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக பொறுப்பேற்பு

இந்தச் சம்பவங்களால் மருத்துவர் முகேஷ் குமார் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி