ஆப்நகரம்

தமிழ் பேசும் நபர்கள் மீது இப்படியொரு கொடூர தாக்குதல்; கேரள காங்கிரஸ் பிரமுகருக்கு வலைவீச்சு!

வயநாட்டில் தம்பதிகள் மீது காங்கிரஸ் பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Jul 2019, 3:43 pm
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 21ஆம் தேதி இரவு 11 மணியளவில், காங்கிரஸ் பிரமுகர் சஜீவானந்தன் ஒரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வாக்குவாதம் முற்றி, அந்த நபரை கடுமையாக தாக்கினார்.
Samayam Tamil Kerala attack


இதற்கிடையில் அந்த நபரின் மனைவி குறுக்கே வந்து தடுக்க முயற்சித்தார். ஆனால் அவரையும் சஜீவானந்தன் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் அதிர்ச்சி உடன் கண்டனர்.

இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த சூழலில் தாக்கப்பட்ட தம்பதி தமிழ் பேசக்கூடியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதனால் அவர்கள் தமிழர்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. வைரலான வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, மாநில மகளிர் ஆணையம் சஜீவானந்தம் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான காங்கிரஸ் பிரமுகர் சஜீவானந்தத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவர வில்லை.

சோளிங்கர் அருகே கழுத்தறுத்து கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட இளைஞர் சடலம் மீட்பு!

நெல்லையில் முன்னாள் மேயர் உட்பட மூன்று பேர் படுகொலை- 3 தனிப்படை அமைப்பு!

அடுத்த செய்தி