ஆப்நகரம்

சிசிடிவி ஷாக்; அமைதியா படிக்கும் மாணவர்களை அடிவெளுக்கும் போலீஸ் - ஜாமியா கொடூரம்!

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் அப்பாவி மாணவர்களை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Feb 2020, 11:53 am
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகரில் மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பலகட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர்.
Samayam Tamil Jamia


அப்போது அங்கு வந்த போலீசார், திரும்ப செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து முன்னேறிச் சென்றனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மாணவிகள் என்றும் பாராமல் போலீசார் மிகவும் கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த போலீசார், மாணவர்கள் பேரணியை விடாமல் தொடர்ந்தனர். நாங்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அவர்கள் கேட்டபாடில்லை. சில போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். மேலும் பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தனர். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு போலீசார் வரும்படியான சூழலை உருவாக்கியதாக கூறினர்.

பதவியேற்பு விழாவில் இப்படியொரு ஆச்சரியம்; தலைநகரில் அரியணை ஏறும் கெஜ்ரிவால் 3.0!

இதையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை உருவாக்கி நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 11ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் போராட்டத்தில் வன்முறைக்கு வித்திட்ட 102 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எம்.ஏ/எம்.பில் பிரிவின் பழைய படிப்பக அரங்கில் மாணவர்கள் அமைதியாக படித்துக் கொண்டிருந்தனர்.

கண்டிப்பாக காதலிக்க மாட்டோம்... கல்லூரி மாணவிகள் உறுதிமொழி..! வைரல் வீடியோ

அப்போது திடீரென உள்ளே புகுந்த போலீசார் மிகக் கொடூரமாக தடியால் தாக்கியுள்ளனர். இது பார்ப்பவர்கள் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வகையில் இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. போராட்டக்காரர்களுக்கும், அமைதியான படிக்கும் மாணவர்களுக்கும் கூடவா வித்தியாசம் தெரியவில்லை என்று போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி