ஆப்நகரம்

ஒரு கடியில் மரணத்தை ஏற்படுத்தும் பாம்பை, உயிருடன் சாப்பிடும் தவளை..!

உலகத்தில் மிக விஷம் நிறைந்த பாம்பை உயிருடன் சாப்பிடும் பச்சை தவளை

Samayam Tamil 1 Dec 2020, 7:16 pm
உணவு சங்கிலியை பொறுத்தவரையில் தவளைகளை பாம்புகள் சாப்பிடுவதையே நாம் பார்த்துள்ளோம். கேள்விப்பட்டுளோம். ஆனால், அதே உணவு சங்கியில் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் வகையில் விஷம் நிறைந்த கொடிய பாம்பினை பச்சை தவளை ஒன்று உயிரோடு விழுங்கும் நிகழ்வினை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil frog swallows snake


அது தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேமி என்பவர் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது கோஸ்டல் தைபான் வகையைச் சேர்ந்த கொடிய விஷம் நிறைந்த பாம்புவை பச்சை தவளை ஒன்று உயிரோடு சாப்பிடுவதை அவர் கண்டுள்ளார்.


பாம்புவை சாப்பிடுவதால் தவளையின் உயிர் போய் விடுமே என்ற கவலையிலும், பாம்பை விடுவிக்கும் நோக்கிலும் அதை தடுக்க அவர் முயற்சித்துள்ளார். ஆனால், அதற்குள் தவளையின் வாயிக்குள் பாம்பின் முழு பகுதி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: வெடித்த சர்ச்சை!

இந்த கோஸ்டல் தைபான் வகையைச் சேர்ந்த பாம்பு உலகிலேயே விஷம் நிறைந்த பாம்பு இனங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பாம்புடன் கடி வாங்கியவருக்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால், பாதிக்கப்பட்டவர் அரை மணி நேரத்திற்குள் இறந்து விட நேரிடும். இந்த கோஸ்டல் தைபான் வகை பாம்புகள் வடக்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவின் கடற் கரையோரப் பகுதிகளிலும், நியூ கினியா தீவிலும் காணப்படும்.

அடுத்த செய்தி