ஆப்நகரம்

ஷாப்பிங் மால் போறீங்களா? இந்த ஹேப்பி நியூஸ் உங்களுக்கு தான்!

வணிக வளாகங்களில் பார்கிங் கட்டணம் வசூலிக்க வளாகங்களின் உரிமையாளர்களுக்கு உரிமை இல்லை என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Jan 2022, 11:01 am
நாடு முழுவதும் உள்ள மால்கள், வணிக வளாகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வாகனம் நிறுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்த வழக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil shopping mall parking


பெரு நகரங்களில் வசிப்பவர்கள் பொருள்கள் வாங்க, திரையரங்குகளுக்கு செல்ல, பொழுது போக்க செல்லும் இடங்களில் முக்கியமானது ஷாப்பிங் மால்கள். முற்றிலும் குளிரூட்டப்பட்ட அந்த வளாகங்களுக்குள் சென்றால் பலருக்கும் நேரம் போவதே தெரியாது.

ஆனால் பார்க்கிங்கில் நிறுத்தியிருக்கும் தங்கள் வாகனங்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கட்டணம் உயர்ந்து கொண்டே வருவது வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. மூன்று மணி நேரம் திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பினால் திரையரங்க டிக்கெட் விலைக்கு இணையாக வாகனத்துக்கு பார்கிங் கட்டணம் கொடுப்பது நடுத்தர மக்களின் பட்ஜெட்டை பதம் பார்த்துவிடுகிறது.
இபிஎஸ் சம்பந்திக்கு கொலை மிரட்டல்: கொத்தாக தூக்கிய போலீஸ்!
இந்த நிலையில் மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் வாகன கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கேரள நீதிமன்றம் இதுகுறித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் வணிக வளாகங்கள், மால்கள் ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க மால் உரிமையாளர்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்களுக்கு உரிமை இல்லை என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிகரிக்கும் பாதிப்பு: இனி வாரத்தில் இரு நாள்கள் முழு ஊரடங்கு!
கட்டிடத்தின் விதிகளின்படி வாகன நிறுத்துவதற்கு போதுமான இடம் இருந்தால் மட்டுமே அந்த கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உண்டு என்றும் அவ்வாறு இருக்கும்போது வணிக வளாகங்களுக்கு தனியாக வாகன கட்டண வசூல் செய்ய உரிமை இல்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு வாடிக்கையாளர்களிடம் நிம்மதி பெருமூச்சை வரவழைத்துள்ளது.

அடுத்த செய்தி