ஆப்நகரம்

மாநில மக்களை ஏற்காத அரசுகள், அதிர்ச்சியில் ரயில்வே!

மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப மாநில அரசுகள் அனுமதி வழங்குவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது...

Samayam Tamil 18 May 2020, 11:25 pm
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதில் மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான் போன்ற மாநில அரசுகள் ரயில்கள் இயக்க அனுமதி வழங்குவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil மாநில மக்களை ஏற்காத அரசுகள், அதிர்ச்சியில் ரயில்வே!
மாநில மக்களை ஏற்காத அரசுகள், அதிர்ச்சியில் ரயில்வே!


உத்தரப் பிரதேச அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க 800 சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. அதே வேளையில் மேற்கு வங்காள அரசு 19 ரயில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம், "சில மாநில அரசுகள் இதுபோல் நடந்து கொள்வது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி" எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ரயில்வே அமைச்சகம் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், "மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த மக்களே அதிகளவில் நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்த்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களை மீட்க அம்மாநில அரசு ரயில்களை இயக்க அனுமதி வழங்குவதில்லை" எனக் கூறியுள்ளது.

மதுரை டூ உத்தரப் பிரதேசம்: தொழிலாளர்கள் ஹேப்பி ஜெர்னி!!

இதுபோல் அனுமதி மறுக்கப்படுவதால் வெளி மாநிலத்திலிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சட்ட விரோதமாகப் பேருந்துகளிலும், லாரிகளிலும் பயணம் மேற்கொள்கின்றனர்.

மேற்கு வங்காளத்தைப் போலவே சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான் மாநில அரசுகளும் மிகக் குறைவான ரயில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் புயல் காரணமாகக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ரயில்களை இயக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

அடுத்த செய்தி