ஆப்நகரம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஜிகாதிகளை ஆதரிக்கிறது: யோகி ஆதித்யநாத்

காங்கிரஸ் அரசு கர்நாடகத்தில் ஜிகாதிகளை ஆதரிக்கிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 5 May 2018, 3:11 pm
காங்கிரஸ் அரசு கர்நாடகத்தில் ஜிகாதிகளை ஆதரிக்கிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil Adityanath4


கர்நாடாக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கார்வார் மாவட்டம், சிர்சி நகரில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “உத்தரப் பிரதேசம் ராமரின் நிலம். ராமரின் நிலத்திலிருந்து அனுமனின் நிலமான கர்நாடகத்திற்கு வந்திருக்கிறேன். அனுமன்தான் ராம ராஜ்ஜியம் அமைவதற்கு உதவி செய்ததார்.” என்று குறிப்பிட்டார்.

“சித்தராமையா தலைமையிலான கர்நாடகா காங்கிரஸ் அரசு ஜிஹாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு மக்களை பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடிக்கிறது. இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசு துணைபோகிறது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அடுத்த செய்தி