ஆப்நகரம்

தமிழர்களை கதிகலங்க வைத்துள்ள கர்நாடக பட்ஜெட்!

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகும் நிலையில், கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ளது.

Samayam Tamil 16 Feb 2018, 10:38 am
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகும் நிலையில், கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ளது.
Samayam Tamil siddaramaiah to present record 13th state budget on today
தமிழர்களை கதிகலங்க வைத்துள்ள கர்நாடக பட்ஜெட்!


முதல்வர் சித்தரமையா தலைமையிலான அரசு இன்று 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை கர்நாடக சட்டசபையில் இன்று தாக்கல் செய்ய உள்ளது. முதல்வரும், நிதி அமைச்சருமான சித்தராமையா, காலை 11 மணிக்கு அமைச்சரவையை கூட்டி, பட்ஜெட் உரைக்கு ஒப்புதல் பெற உள்ளார். அதன்பின்னர் காலை 11.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டசபை வருவதால் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகும் நிலையில், கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ளது தமிழக கர்நாடக மக்களை கதிகலங்க வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பொறுத்தவரையில் இரு மாநிலங்களில் ஏதாவது இரு மாநிலத்துக்குதான் தீர்ப்பு சாதகமாக அமையும் என்பதால், மக்களிடையே கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய இடத்திலுள்ள முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சட்டசபைக்குள் இருப்பார்கள். என்பதால் வன்முறையை கட்டுப்படுத்த வாய்ப்பில்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி