ஆப்நகரம்

சித்தி விநாயகருக்காக ஆரம்பிக்கப்பட்டது டிமேட் வங்கி கணக்கு!

பக்தர்கள் தங்கள் காணிக்கையை வர்த்தக பங்குகளாக பெறுவதற்காக, சித்தி விநாயகர் பெயரில் வங்கியில் டிமேட் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

TOI Contributor 20 Jul 2016, 12:18 pm
மும்பை : பக்தர்கள் தங்கள் காணிக்கையை வர்த்தக பங்குகளாக பெறுவதற்காக, சித்தி விநாயகர் பெயரில் வங்கியில் டிமேட் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil c to accept shares
சித்தி விநாயகருக்காக ஆரம்பிக்கப்பட்டது டிமேட் வங்கி கணக்கு!


மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயில் உள்ளது. அங்கு பக்தர்கள் மனமுறுகி வேண்டும் வரத்தை விநாயகர் நிறைவேற்றுவதாகவும் அதனால், கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் நிறம்பி வழிகிறது. பக்தர்களின் வேண்டுதலை நிறைவேறிய பின், அவர்கள் தங்களது காணிக்கையை தங்கம், வைர நகைகள், பணமாகவும், பொருளாகவும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சித்தி விநாயகருக்கு பங்கு சந்தையின் பங்குகளை காணிக்கையாக அளிக்க பலர் முன்வருவதாகவும். இந்த பங்குகளின் மூலம் கோயிலின் காணிக்கை பெருகும் என தெரிவித்த கோயில் நிர்வாக அதிகாரி நரேந்திர ரானே, இதற்காக சித்தி விநாயகரின் கோயிலின் சார்பில் டிமேட் வங்கி கணக்கு தொடங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், பெறப்படும் பங்குகள் விற்பனையோ, வர்த்தக ரீதியிலோ பயன்படுத்தப்போவதில்லை என்றும், பங்குகள் பெறப்பட்ட நாளிலேயோ அல்லது மறுநாளிலேயே அந்த பங்குக்குரிய பணத்தை, கோயிலின் சேமிப்புக்கணக்கில் வைப்பு தொகையில் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வளமையான கோயில் என அனைவராலும் அறியப்பட்டும் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாக டிமேட் கணக்கு கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு அதன் மூலம் பங்குவர்த்தக பங்குகள் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி