ஆப்நகரம்

மணமகளை திருமணம் முடிக்கும் மணமகனின் சகோதரி!

குஜராத்தில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சடங்குமுறையை கடைபிக்காவிட்டால் துன்பங்கள் வந்து சேரும் என அப்பகுதியினரின் நம்பிக்கை.

Samayam Tamil 26 May 2019, 4:11 pm
குஜராத்தில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 64380


குஜராத்தில் சோட்டா உதேபூர் நகரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் என்ற 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியினர் வினோத நடைமுறை ஒன்றை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

இங்குள்ள ஆண் ஒருவர் திருமணம் செய்வதற்காக ஷெர்வானி உடை அணிந்து, தலையில் தலைப்பாகை அணிந்து, பாரம்பரிய வாள் ஏந்தி திருமணத்திற்கு தயாராகிறார். ஆனால் அவரது திருமணத்தில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. அதற்கு காரணம் அவர்களது சடங்குமுறை.

அவருக்கு பதிலாக திருமணம் ஆகாத அவரது சகோதரி அல்லது அவரது குடும்பத்தில் உள்ள கன்னிப்பெண் ஒருவர் மணமகனுக்கு பதிலாக அனைத்து சடங்குகளையும் செய்வார். மணமகளின் வீட்டிற்கு சென்று அவரை மணமுடித்து, பின்பு அவரை அழைத்து வருவார்.

இந்த வழக்கம் பல காலங்களாக நடந்து வருகிறது. இத்தகைய சடங்குமுறையை கடைபிக்காவிட்டால் துன்பங்கள் வந்து சேரும் என அப்பகுதியினரின் நம்பிக்கை. இந்த சடங்கை கடைபிடிக்காதவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்களது திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டுள்ளது எனவும் கிராம தலைவர் ராம்சிங்பாய் ரத்வா தெரிவிக்கிறார்.

அடுத்த செய்தி