ஆப்நகரம்

30 நாள் ஆச்சு; இன்னும் இயல்பு நிலை வரலயாம்- பெரும் சிரமத்தில் காஷ்மீர் மக்கள்!

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும், இன்னும் இயல்பு நிலை திரும்பாததால், பொதுமக்கல் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Samayam Tamil 4 Sep 2019, 10:06 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ, மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்ட வடிவம் பெற்றது.
Samayam Tamil Kashmir Tension


இதன்மூலம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவுகள் ரத்து, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள், காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு ஆகிய சட்டங்கள் அமலுக்கு வந்தன.

ரொம்ப கிட்ட வந்தாச்சு; நிலவிற்கு ‘ஹாய்’ சொன்ன விக்ரம் லேண்டர்- வெற்றிப் பாதையில் சந்திரயான் -2!

இந்த சட்டங்கள் நிறைவேற்றுவதற்கு முன்பாக, ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத அளவு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, பாதுகாப்பை மத்திய அரசு பலப்படுத்தி இருந்தது.

பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழலுக்கு ஏற்ப, படிப்படியாக தடை விலக்கிக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தது.

நல்ல ஆசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகள் - விருது பெறும் ஆளுமைகளுக்கு பிரதமர் வாழ்த்து!

இந்நிலையில் 30 நாட்கள் ஆகியும் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஆனால் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சொந்த வாகனங்களில் பொதுமக்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு காணப்படுகின்றன.

முக்கிய வழக்கில் வசமாக சிக்கினார்- கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது!

அடுத்த செய்தி