ஆப்நகரம்

ரயிலில் தூங்குவதற்கு கட்டுப்பாடு! ரயில்வே தடாலடி!

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் இனிமேல் பயணிகள் 8 மணி நேரம் மட்டுமே தூங்கலாம்.

TNN 17 Sep 2017, 3:05 pm
ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் இனிமேல் பயணிகள் 8 மணி நேரம் மட்டுமே தூங்கலாம்.
Samayam Tamil sleeping time cut by an hour for train passengers in new rule
ரயிலில் தூங்குவதற்கு கட்டுப்பாடு! ரயில்வே தடாலடி!


ரயில்களில் படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்த பயணிகள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கலாம் என்று விதிமுறை இருந்தது. அதாவது 9 மணி நேரம் உறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என்று மாற்றியுள்ளது ரயில்வே அமைச்சகம். இதன் மூலம் தூங்குவதற்கான நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

கீழ் படுக்கை வசதி மற்றும் நடுவரிசை படுக்கை முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தும். இந்த இரண்டு படுக்கைகளில் பயணம் செய்யும் பயணிகள் அதிக நேரம் தூங்கிவிட்டால், விழித்திருக்கும் மற்ற பயணிகள் அமர்ந்து வர இடையூறு ஏற்படும். இதனால், அனுமதிக்கப்பட்ட தூங்கும் நேரத்தைக் குறைத்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.

படுக்கை வசதியுடன் கூடிய அனைத்து ரயில்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். இருப்பினும், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் கூடுதல் நேரம் தூங்கினால் சக பயணிகள் அனுசரித்துக்கொள்ள வேண்டும் என்றும் ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்த செய்தி