ஆப்நகரம்

40 அடி கிணற்றில் சிக்கிய சோம்பேறி கரடி: படாதபாடு பட்டு மீட்ட வனத்துறையினர்!

தும்கூர்: கர்நாடகாவின் தும்கூரில் 40 அடி கிணற்றில் சிக்கிய கரடியை சுமார் 2 மணி போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் மீட்டனர்.

Samayam Tamil 8 Jan 2019, 10:26 pm
தும்கூர்: கர்நாடகாவின் தும்கூரில் 40 அடி கிணற்றில் சிக்கிய கரடியை சுமார் 2 மணி போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் மீட்டனர்.
Samayam Tamil sloth bear


கர்நாடகாவின் தும்கூர் பகுதியில் உள்ள விவாசய நிலத்தில் இருந்த 40 அடி கிணற்றில் கரடி ஒன்று சிக்கிக்கொண்டது. இந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. இதன் அலற ல் சத்தத்தை கேட்ட நிலத்தின் உரிமையாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக வனத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் பன்னார்கட்டா தேசிய பூங்காவின் நிதின் கவுடா தலைமையினான குழுவினர் அங்கு விரைந்தனர். அவர்கள் கரடியை மீட்க பல வழிகளில் முயற்சி செய்தனர்.

ஆனால் அந்த சோம்பேறிக் கரடி வனத்துறை அதிகாரிகளின் முயறசிக்கு கொஞ்சமும் ஒத்துழைக்காமல், கிணற்றிலேயே சுற்றி சுற்றி வந்துள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் வனத்துறை அதிகாரிகள், கரடியை வலைவீசி பத்திரமாக மீட்டனர்.
தேன் கூடு:
இந்த கரடி அப்பகுதியில் இருந்த தேன் கூட்டை எடுக்கும் முயற்சியில் இந்த கிணற்றில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட கரடியை அதிகாரிகள் பத்திரமாக காட்டுப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.

அடுத்த செய்தி