ஆப்நகரம்

ஸ்மார்ட் குப்பை தொட்டிகள், புகார்கூட பதிவு செய்யும்!

கர்நாடகா கலாபுராகி பல்கலைகழக மாணவர்கள் ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகளை கண்டுபிடித்துள்ளனர். இதன்படி,

Samayam Tamil 3 Oct 2019, 3:33 pm
கர்நாடகா கலாபுராகி மாவட்டத்தில் மாநில பல்கலைகழகம் உள்ளது. பல்கலைகழக மாணவர்கள் சிலர், இணைந்து திடக் கழிவுகளை ஸ்மார்ட்டாக அகற்ற ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகளை உருவாக்கியுள்ளனர்.
Samayam Tamil குப்பை மேலாண்மை


இந்த குப்பைத் தொட்டிகளில் தானியங்கி சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சார்கள், குப்பைத் தொட்டிகள் நிறைந்தவுடன் சம்பந்தப்பட்ட பகுதியை சார்ந்த துப்புறவு பணியாளரின் மொபையில் எண்ணுக்கு தகவல் அனுப்பி வைக்கும்.

இந்த தானியங்கி சென்சார்கள் பொருத்தப்படும்போது, சம்பந்தப்பட்ட பகுதி துப்புரவு பணியாளர்களின் விவரம், பகுதி மேற்பார்வையாளரின் தொடர்பு எண் ஆகியவை கோரப்பட்டு சேமித்து வைத்துக் கொள்ளப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பகுதி துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் நேரில் வந்து குப்பைகளை அகற்றவில்லை என்றால், அடுத்த தகவல் மேற்பார்வையாளருக்கு புகாராக செல்கிறது. திடக்கழிவுகளை அகற்ற மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்த செய்தி