ஆப்நகரம்

கொரோனா ஸ்கிரீனிங்கா? வந்தாச்சு ஸ்மார்ட் ஹெல்மெட்; செம ஸ்பீடு பரிசோதனை!

கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் தொடர்பாக வேகமாக பரிசோதனைகள் செய்வதற்கு ஸ்மார்ட் ஹெல்மெட்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

Samayam Tamil 24 Jul 2020, 5:49 am
நாட்டிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை மும்பையில் தான் அதிகபட்ச பாதிப்பு காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மும்பையில் 1,05,923 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 77,102 பேர் குணமடைந்துள்ளனர். 5,930 பேர் பலியாகி விட்டனர். 22,599 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்த நோயாளிகளை விரைவாக கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது ஒன்றே தற்போதைய ஒரே வழி.
Samayam Tamil Smart Helmets in Mumbai


இதன்மூலம் தான் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும். முதலில் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்களை அடையாளம் காண வேண்டும். இதற்கு விரைவாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதையொட்டி ஸ்மார்ட் ஹெல்மெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை மகாராஷ்டிர மாநில அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

லாக்டவுன் முடிஞ்சது, வண்டியை எடுத்துட்டு கிளம்பிய மக்கள் - நெரிசலில் ஸ்தம்பித்த பெங்களூரு!

இதன்மூலம் இரண்டரை மணி நேரத்தில் 6,000 பேருக்கு பரிசோதனைகள் செய்கின்றனர். முன்னதாக உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவிகள் மூலம் இரண்டரை மணி நேரத்தில் 300 பேர் வரை மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

ஸ்மார்ட் ஹெல்மெட்கள் வருகையால் பரிசோதனைகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. இதில் உடல் வெப்பநிலையை கணக்கிடும் தெர்மல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே யாருக்கெல்லாம் உடல் வெப்பநிலை அதிகம் இருக்கிறதோ, அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுவர்.

இதன் விலை ரூ.6 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த ஹெல்மெட்டை வாங்கி மும்பை மற்றும் புனே நகர அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர்.

சுவர்களுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிய சிறுமி... பதைபதைக்கும் வீடியோ!

துபாய், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் இந்த ஹெல்மெட்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மேலும் பல பகுதிகளுக்கு ஸ்மார்ட் ஹெல்மெட்கள் பயன்பாட்டை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி