ஆப்நகரம்

கடும் பனிப்பொழிவு கேதர்நாத்தில் சிக்கித்தவிக்கும் 2,500 பக்தர்கள் !

இமாலயப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, புனிதயாத்திரை சென்ற 2,500 பக்தர்கள் கேதர்நாத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

Samayam Tamil 9 May 2018, 12:29 pm
இமாலயப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, புனிதயாத்திரை சென்ற 2,500 பக்தர்கள் கேதர்நாத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
Samayam Tamil index


சப்த புரி' என்றழைக்கப்படும் இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் ஹரித்துவாரும் ஒன்று. ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் உள்பட உத்தரகாண்டின் பிற புண்ணிய ஸ்தலங்களுக்கும் ஹரித்துவார் நுழைவு வாயிலாக விளங்குகிறது.தன்னகத்தே உள்ள மத ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலாதளங்கள் காரணமாக ஹரித்துவார் உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.

இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் புனித பயணத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் இமாலய மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. 0.3 டிகிரி குளிர் நிலவுவதால் புனிதப் பயணம் சென்ற பக்தர்கள் கேதர்நாத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.


இதுதொடர்பாக மாவட்ட அவசரநிலை மையத்தில் இருந்து கிடைத்திருக்கும் தகவலின்படி சோன்பிரியாக் பகுதியில் 2, 200 பக்தர்கள், லின்சோலி பகுதியில் 200 பக்தர்கள், கெளரிகொண்ட் பகுதியில் 350 பக்தர்கள் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு மற்றும் புயல் காரணமாக அனைத்து சாலைகளையும் 3 அடி வரை பனி மூடியுள்ளதால் சுற்றுலா சென்றுள்ள பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அடுத்த செய்தி