ஆப்நகரம்

இந்தியாவில் இதுவரை 536 பேருக்கு கோவிட் 19 உறுதி: ஐ.சி.எம்.ஆர். அறிக்கை

மார்ச் 24ஆம் தேதி இரவு 8 மணி வரையிலான தகவலின்படி இந்தியாவில் 536 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது என்று...

Samayam Tamil 25 Mar 2020, 12:09 am
கொரோனா பாதிப்பு இந்தியாவில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்த நிலையில், தேசிய அளவிலான முடக்கம் (ஏறக்குறைய ஊரடங்கு) அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil so far 536 confirmed covid 19 cases found in india said by icmr report
இந்தியாவில் இதுவரை 536 பேருக்கு கோவிட் 19 உறுதி: ஐ.சி.எம்.ஆர். அறிக்கை


இந்த முடக்கம் 25ஆம் தேதி தொடங்குகிற புள்ளியான நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி இதுவரை இந்தியாவில் 536 பேருக்கு கோவிட் 19 நோய் இருப்பது கண்டறிந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதனை இன்று இரவு 8 மணியளவிலான தகவலறிக்கையில் ஐ.சி.எம்.ஆர். உறுதிசெய்துள்ளது.

அடுத்த செய்தி