ஆப்நகரம்

சமூக ஊடகங்களில் இளைஞர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க வேண்டும்: பிரதமர் மோடி!!

இன்று உலகம் முழுவதும் சமூக ஊடக தினம் கொண்டாடப்படுவதையடுத்து, பிரதமர் மோடி அனைவர்க்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Jun 2018, 2:31 pm
இன்று உலகம் முழுவதும் சமூக ஊடக தினம் கொண்டாடப்படுவதையடுத்து, பிரதமர் மோடி அனைவர்க்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil சமூக ஊடகங்களில் இளைஞர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க வேண்டும்: பிரதமர் மோடி!!
சமூக ஊடகங்களில் இளைஞர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க வேண்டும்: பிரதமர் மோடி!!


தற்போதைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, யாரும் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு சென்றுள்ளது. அதிலும், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் அறிமுகம், உலகை ஒரு கைக்குள் அடக்கிவிட்டது. இதனால், யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. மக்கள் தங்கள் கருத்துகளை ஒரு பொதுவெளியில் வைக்க ஒரு தளத்தை இந்த சமூக ஊடகங்கள் ஏற்படுத்தி தருகின்றன. அதுமட்டுமில்லாமல், எந்த செய்தியையும் உடனே அறிவதற்கு சமூக ஊடகங்கள் ஒரு கருவியாக அமைந்துள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் மிகவும் துடிப்பாகச் செயல்படும் பிரதமர் மோடி, சமூக ஊடகத் தினத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக ஊடக தின நல்வாழ்த்துகள். சமூக ஊடகமானது, நமது எண்ணப் பரிமாற்றங்களை ஜனநாயகப்படுத்த ஒரு முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உலக முழுவதும் உள்ள பல மில்லியன் மக்கள் தங்கள் கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளிப்படத்தும் தளமாக அது அமைந்துள்ளது.

இந்நாளில், சமூக ஊடகங்களை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தும் எனது இளம் நண்பர்களுக்கு எனது வாழ்த்துகளை குறிப்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் வெளிப்படையாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் அவர்களின் அணுகுமுறை மிகவும் பாராட்டுக்குரியது. இளைஞர்கள் தங்கள் கருத்துகளை மிகவும் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என நான் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி