ஆப்நகரம்

புல்வாமா தாக்குதல் - காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்க நேசக் கதவுகளைத் திறந்துவிட்ட சோஷியல் மீடியா!

சாமானியன் முதல் பிரபலங்கள், செய்தியாளர்கள் எனப் பலரும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தொடங்கியுள்ளனர்.

Samayam Tamil 17 Feb 2019, 5:42 pm
சகிப்புத் தன்மை இல்லாமை, வெறுப்புணர்வை பரப்புதல், பிரபலங்களை பல்வேறு விதமாக விமர்சித்தல், நீயா நானா என மோதல் உள்ளிட்டவற்றால் சமூக வலைத்தளங்கள் மீது தவறான பார்வை நீடித்து வருகிறது.
Samayam Tamil Pulwama Tribute


ஆனால் ஒரு நல்ல விஷயத்திற்காக ஆன்லைன் வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தால், அதற்கு எப்போதும் வரவேற்பு உண்டு. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது சமீபத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடைபெற்றது.

இதில் 40 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இது அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய குடிமக்கள் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களின் வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர். புல்வாமா சம்பவத்தை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் காஷ்மீர் மாணவர்கள் மீது வலதுசாரி மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரால் தான், புல்வாமா தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது. இதன் காரணமாக அம்மாநில மக்கள் மீது தவறான பார்வையை விதைக்க முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கதவுகள் திறந்தே இருப்பதாக காஷ்மீர் மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.

”யாராவது உங்களை துன்புறுத்தினால், அடித்து விரட்டினால் எங்கள் வீடுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன” என காஷ்மீர் மக்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகின்றன.






இந்நிலையில் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து சி.ஆர்.பி.எஃப் தீவிர விசாரணை மேற்கொண்டது. அதில், இதுபோன்ற தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை. அவை பொய்யானவை. இதுபோன்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி