ஆப்நகரம்

சியாச்சின் மலையில் அதிர்ச்சி; பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள்!

ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த சியாச்சின் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.

Samayam Tamil 19 Nov 2019, 7:37 am
ஜம்மு காஷ்மீரில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் டோக்ரா ரெஜிமெண்டில் இருந்து மற்றொரு போஸ்டிற்கு 6 ராணுவ வீரர்கள் மற்றும் 2 போர்டர்கள் சென்று கொண்டிருந்தனர்.
Samayam Tamil Siachen


இந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 19,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ளது. இந்த சூழலில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதில் ராணுவ வீரர்கள் மற்றும் போர்டர்கள் சிக்கிக் கொண்டனர்.

தலைநகரில் விஸ்வரூபமெடுக்கும் மாணவர் போராட்டம்... போலீஸ் என்ன செய்தது?

இதுதொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், பனிச்சரிவு மீட்பு பணிக்காக அருகிலுள்ள முகாம்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட 8 பேரையும் வெளியே கொண்டு வந்தனர்.

அவங்க எந்த தைரியத்துல ஆட்சியமைக்க முடியும்னு சொல்றாங்கன்னு தெரியல : சிவசேனாவை சாடிய சரத் பவார் !!

இவர்களில் 7 பேர் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர்கள் மூலம் அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எல்லையில் பனிச்சரிவு... 8க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சிக்கியிருப்பதாக தகவல்

ஆனால் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். இதில் 4 ராணுவ வீரர்களும், 2 போர்டர்களும் அடங்குவர். கடந்த ஏப்ரல் 1984ல் இருந்து சியாச்சின் பனிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 35 அதிகாரிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.

அடுத்த செய்தி