ஆப்நகரம்

சாப்பிட உட்கார்ந்த குடும்பம்... சப்ளையராக வந்த மகன்... நெகிழ வைத்த வீடியோ..!

வெளிநாட்டில் வேலை செய்து வந்த மகன் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் வந்து தனது குடும்பத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 3 Jan 2020, 2:20 pm
தாய், தந்தையை பிரிந்து வெளியூரிலும், வெளி நாட்டிலும் வேலை பார்க்கும் மகன்கள் ஏராளம். அந்த வகையில் ' போயிட்டு வரேன் அம்மா ' என்று தாயை பார்த்து ஒரு மகனோ, மகளோ கூறும் தருணம் சுற்றி வேடிக்கை பார்ப்பவர்களையும் கலங்க வைத்து விடும்.
Samayam Tamil சாப்பிட உட்கார்ந்த குடும்பம சப்ளையராக வந்த மகன்


இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு ஏற்படாமல் இருந்தாலும் கூட வீடியோக்கள் மூலமாக நாம் பார்த்திருப்போம். அதுபோலத்தான் இந்த வீடியோவில் வெளிநாட்டுக்கு சென்று வீடு திரும்பிய மகனின் சர்ப்ரைஸ் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, சகோதரி என மூன்று பேரும் ஒரு ஹோட்டலில் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். அப்போது சர்வராக அவர்களது மகன் தொப்பி அணிந்துகொண்டு வருகிறார். அவர் கொடுக்கும் மெனு புக்கை வாங்கி பார்க்கும் தந்தை உணவை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்.

அடிச்சது குளிர்.! 1000 கோடி வசூல்... தமிழகத்தை மிஞ்சிய டெல்லி மது விற்பனை...

ஆனால் அந்த வாலிபரின் தாய் சற்று உன்னிப்பாக அவரை பார்த்துக்கொண்டே இருக்க, மகனின் பெயரை உச்சரிக்கிறார். இதையடுத்து அந்த வாலிபர் சிரித்துக்கொண்டே தான் அணிந்திருந்த தொப்பியை கழட்டுகிறார்.

பின்னர் சப்ளையராக வந்த வாலிபர் தன்னுடைய மகன்தான் என தெரிந்ததும் குடும்பமே பரவசம் அடைந்து அவரை கட்டிப்பிடித்து பாசத்தை வெளிப்படுத்துகிறது.

அடுத்த செய்தி