ஆப்நகரம்

மருத்துவ உதவி கிடைக்காமல் போன உயிர்... மகனின் சடலத்துடன் அள்ளப்படும் தாய்...

வாரணாசியில் சிகிச்சை உதவி கிடைக்காததால் மரணமடைந்த மகனின் சடலத்தை சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு செல்லும் தாய்

Samayam Tamil 20 Apr 2021, 5:35 pm
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த வினய் சிங் என்ற இளைஞர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுளார். இந்நிலையில் கடந்த வாரம் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் திங்கட்கிழமை அன்று அவசர மருத்துவ சிகிச்சைக்காக தனது தாய் சந்திரகலாவுடன் வாரணாசிக்கு வந்திருந்தார்.
Samayam Tamil twitter pic


வலி மிக கடுமையாக இருந்ததால் அருகிலிருந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிற நோயாளிகளுக்கு படுக்கை இல்லாத காரணத்தினால் வினய் சிங்கிற்கு அங்கு அட்மிஷன் கிடைக்கவில்லை.

இதையடுத்து, மகனை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் சந்திரகலா. ஆனால் அங்கும் அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. இதற்கிடையில் வினய் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். கண் முன்னே மகன் இறந்துபோனதை கண்டு கதறி அழுதார் சந்திரகலா.


அடுத்த ஷாக்: ராகுல் காந்திக்கும் இப்படியா நடக்கணும்!

இந்நிலையில், மகனின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல வாடகைக்கு ஆம்புலன்ஸ் தேடியுள்ளார். ஆனால், அதுவும் கிடைக்காத நிலையில் சைக்கிள் ரிக்ஷாவை வாடகை பேசி மகனின் சடலத்தை அதில் ஏற்றியுள்ளளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

அடுத்த செய்தி