ஆப்நகரம்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுடன் கெஜ்ரிவால், சோனியா சந்திப்பு

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 13 வயது பெண்ணை இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தனர்.

TOI Contributor 26 May 2016, 2:57 pm
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 13 வயது பெண்ணை இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தனர்.
Samayam Tamil sonia gandhi arvind kejriwal at aiims to meet delhi minor rape victims kin
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுடன் கெஜ்ரிவால், சோனியா சந்திப்பு


தெற்கு டெல்லியில் புல் பிரஹ்லத்பூர் ரயில் நிலையம் அருகே 13 வயது பெண் மிகவும் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து தூக்கி வீசப்பட்டு இருந்தார். இவர் பின்னர் மீட்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் அவர் வீட்டு அருகே வசிக்கும் வாலிபர்தான் என்பதும், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். Sonia Gandhi at AIIMS to meet Delhi minor rape victim's kin. Victim's condition continues to be critical pic.twitter.com/iFuRrziUgM— ANI (@ANI_news) May 26, 2016 இவரை இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து நலம் விசாரித்தனர்.

அப்போது, டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசப்படும் என்றும், பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட முடிவு செய்து இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்..

அடுத்த செய்தி