ஆப்நகரம்

ஓபிசி இடஒதுக்கீடு : பிரதமருக்கு சோனியா அவசர கடிதம்

ஓபிசி பிரிவினருக்கு மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்ய கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 3 Jul 2020, 6:27 pm
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கையின்போது இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதாக தமது கடிதத்தில் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil sonia.


2017 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவு மாணவர்கள் 11 ஆயிரம் இடங்களை இழந்திருப்பதாகவும் தமது கடிதத்தில் சோனியா தெரிவித்துள்ளார்.

உயர் கல்வியி்ல் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்துக்கு எதிரானது எனவும் பிரதமர் மோடிக்கு சோனியா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது: பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு

கொரோனா அச்சம் காரணமாக, நிகழாண்டு மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதித் தேர்வை நடத்துவது குறித்து பரிந்துரைகள தரும்படி, தேசிய தேர்வு முகமையிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரைகளை கேட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி