ஆப்நகரம்

ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஐம்மு காஷ்மீர் மாநிலம், சோப்போர் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Samayam Tamil 3 Aug 2018, 9:50 am
ஐம்மு காஷ்மீர் மாநிலம், சோப்போர் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Samayam Tamil ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!


ஐம்மு காஷ்மீர் மாநிலம் சோப்போர் மாவட்டத்தில் உள்ள துருசு கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தங்கியிருக்கும் இடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் நேற்று நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுமார் 4 மணிநேரமாக நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து சோப்போர் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி