ஆப்நகரம்

Cafe Coffee Day Owner Missing: என்னை மன்னித்துவிடுங்கள்: ஊழியர்களுக்கு கடிதம் எழுதிய 'காஃபி டே' உரிமையாளர்

பிரபல காஃபி டே நிறுவனத்தின் அதிபரும், கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா மாயமான நிலையில், அம்மாநில காவல் துறை சித்தார்த்தாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Samayam Tamil 30 Jul 2019, 3:47 pm
கர்நாடகா மாநிலத்தில் திடீரென மாயமான காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவை காவல் துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil VG Siddhartha 1


கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையளருமான வி.ஜி.சித்தார்த்தா நேற்று மாலை திடீரென மாயமானார். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேயிலைத் தோட்டத்திற்கு சொந்தக்காரர் என்ற பெயரை பெற்ற சித்தார்த்தா நேற்று இரவு காரில் வந்துகொண்டிருந்தார். கார் மங்களூரு நேத்ரா நதி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது திடீரென காரில் இருந்து இறங்கியுள்ளார்.

Also Read: முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? தேடுதல் பணி தீவிரம்

பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்ற சித்தார்த்தா வெகு நேரமாகியும் மீண்டும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் சித்தார்த்தாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அனைத்து வைக்கப்பட்டுள்ளதாக பதில் அளித்துள்ளது. நேற்று மாலை மாயமான நிலையில், தற்போது வரை சித்தார்த்தா குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், இறுதியாக சித்தார்த்தா எழுதிய கடிதம் ஒன்றை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த கடிதத்தில், “37 ஆண்டுகால கடுமையான உழைப்பின் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை உருவாக்கினேன். இருப்பினும் ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன்.

Also Read: முடிவுக்கு வந்த அரசியல் வாழ்வு- ஒட்டுமொத்தமாக விலகினார் ஜெ.தீபா!

புதிய நிர்வாகம் பொறுப்பேற்று அனைத்தையும் வெற்றிகரமாக நடத்த வேண்டும என்று விரும்புகிறேன். ஊழியர்கள் அனைவரும் மனம் தளராமல் புதிய நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றி வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.


எனது நிறுவனங்களின் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் நான் தான் பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றியிருந்தால் மன்னித்துவிடுங்கள். நீண்டகாலமாக நான் போராடி வருகிறேன். முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து எனக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதன் பின்னரும் என்னால் அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் அனைத்தையும் கைவிடுகிறேன்.

Also Read: தமிழகத்தில் 12 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு

யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அனைத்து தவறுகளும் என்னுடையது தான். இந்த கடிதத்துனுடன் எனது சொத்து மதிப்பு ஆவணங்களையும் இணைத்துள்ளேன். ஒரு நாள் அனைவரும் என்னை புரிந்துகொள்வீர்கள். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி