ஆப்நகரம்

சபாநாயகருக்கே முழு அதிகாரம் - கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கே அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 17 Jul 2019, 11:00 am
கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. ஆரம்பம் முதலே இந்த கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. அமைச்சர் பதவி, இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மோதல் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.
Samayam Tamil SC


இதனால் சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவியை ஒதுக்கி, முதல்வர் குமாரசாமி அதிரடி காட்டினார். இருப்பினும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இந்த சூழலில் மஜத, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர்.

இவர்களில் 10 பேர் மும்பை சென்று, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினர். அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முயற்சித்தும் முடியவில்லை. இவர்களில் பலரும் பாஜகவிற்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழப்பத்திற்கு இடையே கர்நாடகா சட்டமன்றத்தில் 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!!

இதைக் காரணம் காட்டி, ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்க ஆளும் தரப்பு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த சூழலில் சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்.

குஜராத்தின் புதிய ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்!

தங்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. ஜனநாயக முறைப்படி செயல்பட மறுக்கிறார் எனக் குற்றம்சாட்டினர். ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நாடாளுமன்றத்திற்கு வரத்தவறிய அமைச்சர்களின் பட்டியலை கேட்ட மோடி!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கே முழு அதிகாரம் உள்ளது. ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து, எம்.எல்.ஏக்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி