ஆப்நகரம்

Aircel Maxis Case: கைது செய்ய தடை நீட்டிப்பு; தொடர்ந்து எஸ்கேப் ஆகும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Aug 2019, 1:19 pm
கடந்த 2006ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது ஏர்செல் நிறுவனத்தில், மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்யப்பட்டது.
Samayam Tamil P Chidambaram


இதற்கு ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உறுதுணையாக செயல்பட்டுள்ளது. ஆனால் இந்த முதலீட்டிற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு உரிய அனுமதி தரவில்லை.

Also Read: புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சனை? மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பிக்கள் ஆலோசனை!

எனவே சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் விசாரணையில் தங்களை கைது செய்ய தடைக் கோரி, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தனர்.

Also Read: எதிர்ப்பதுபோல எதிர்த்துவிட்டு என்.ஐ.ஏ-வை ஆதரித்த திமுக; முத்தலாக்குக்கு ஆதரவளித்த அதிமுக

அதற்கு இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் தொடர்ந்து கைதுக்கான தடையை நீட்டித்து, நீதிமன்ற உத்தரவை பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணையில், வரும் 9ஆம் தேதி வரை இருவரையும் கைது தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: ஜெகன்மோகன் ரெட்டி சொத்துக்கள் விடுவிப்பு; பின்னணி என்ன?

அடுத்த செய்தி