புதுதில்லி: ரயிலில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக உணவு வழங்கும் ஜனனி சேவா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ரயில்களில் நீண்ட தூரம் குழந்தைகளுடன் பயணிக்கும்போது அவர்களுக்கான உணவு கிடைப்பதில் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் விதமாக குழந்தைகளுக்கென பிரத்யேக உணவு வழங்கும் ஜனனி சேவா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இட்லி, பழச்சாறு, பர்கர், சாண்ட்விட்ச், நூடுல்ஸ், பிரைடு ரைஸ் உள்ளிட்ட உணவுகள் ரயிலில் வழங்கப்படும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே இந்த உணவுக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ, எஸ்எம்எஸ் அனுப்பியோ, ரயில்வே ஆஃப் அல்லது 1323 என்ற இலவச எண்ணிலோ தொடர்பு கொண்டு குழந்தைகளுக்கான உணவுகளை முன்பதிவு செய்யலாம்.
முதல் கட்டமாக சென்னை, தில்லி, மும்பை, ஹெளரா, புனே, சூரத், லக்னோ உள்ளிட்ட 25 ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்கி வைத்தார்.
ரயில்களில் நீண்ட தூரம் குழந்தைகளுடன் பயணிக்கும்போது அவர்களுக்கான உணவு கிடைப்பதில் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் விதமாக குழந்தைகளுக்கென பிரத்யேக உணவு வழங்கும் ஜனனி சேவா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இட்லி, பழச்சாறு, பர்கர், சாண்ட்விட்ச், நூடுல்ஸ், பிரைடு ரைஸ் உள்ளிட்ட உணவுகள் ரயிலில் வழங்கப்படும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே இந்த உணவுக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ, எஸ்எம்எஸ் அனுப்பியோ, ரயில்வே ஆஃப் அல்லது 1323 என்ற இலவச எண்ணிலோ தொடர்பு கொண்டு குழந்தைகளுக்கான உணவுகளை முன்பதிவு செய்யலாம்.
முதல் கட்டமாக சென்னை, தில்லி, மும்பை, ஹெளரா, புனே, சூரத், லக்னோ உள்ளிட்ட 25 ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்கி வைத்தார்.