ஆப்நகரம்

சர்க்கஸ் நிகழ்ச்சியில் தீபாவளி கொண்டாட்டம்: கலக்கும் கேரளா

நாடு முழுவதும் நேற்று தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

TNN 30 Oct 2016, 9:02 am
பல தாக்குதலுக்கும் மத்தியில் இந்திய இராணுவ எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீபங்கள் ஏற்றி வைத்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். கேரள மாநிலத்திலும், தீபாவளி வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரத்தில் விடுமுறை நாளில் நடந்து வரும் சர்க்கஸ் நிகழ்ச்சியில் தீபாவளிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil special performances being given the circus in trivandrum as part of diwali celebrations
சர்க்கஸ் நிகழ்ச்சியில் தீபாவளி கொண்டாட்டம்: கலக்கும் கேரளா


தீபாவளி திருநாள் தினத்தன்று கையில் தீபங்களுடன் சர்க்கஸ் பெண்கள் வலம் வந்தனர். தீபங்களை வைத்தும் அவர்கள் சாகச நிகழ்ச்சிகளை காட்டினர். சர்க்கஸ் என்றாலே, வழக்கம் போல் யானை, சிங்கம், கரடி, சைக்கிளிங் போன்றை இல்லாமல், வித்தியாசமாக தீபாவளிக்காக தீபங்கள் ஏற்றி வைத்து அதனைக் கொண்டு சர்க்கஸில் சாகசம் காட்டி மக்களை மகிழ்வித்தனர். Special performances being given the circus in Trivandrum as part of #Diwali celebrations (29th Oct) pic.twitter.com/QVnDnSR9AL — ANI (@ANI_news) October 30, 2016 Special performances being given the circus in Trivandrum as part of #Diwali celebrations

அடுத்த செய்தி