ஆப்நகரம்

முதுநிலை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு... மாநில அரசே வழங்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்த இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்து வழங்கலாம் என்றும், இதனைத் தடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கே கூட உரிமையில்லை என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Samayam Tamil 31 Aug 2020, 11:21 am
கிராமப்புற மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவப்படிப்புகளில் இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil Supreme Court


இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின் படி கிராமப்புற மாணவர்களுக்கு முத்நிலை மருத்துவப்படிப்பில் இடஒதுக்கீட் வழங்க இடமில்லை. இதனை எதிர்த்து மருத்துவர்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. இந்நிலையில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, முதுநிலை மருத்துவப்படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், இந்த இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்து வழங்கலாம் என்றும், இதனைத் தடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கே கூட உரிமையில்லை என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



கடந்த இரண்டு ஆண்டுகளாக முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடங்கப்படலாம் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி