ஆப்நகரம்

கொரோனா வைரஸ்: சிகிச்சைக்கு திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு!!

கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, திருப்பதி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு இன்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jan 2020, 6:13 pm
பாம்பை தின்றதால், சீனாவில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அங்கிருந்து உலகம் முழுவதும் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil கொரோனா வைரஸ்: சிகிச்சைக்கு திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு


இந்த நிலையில், திருப்பதி மலைக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணகக்கான பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.

இதனால் சீனாவிலிருந்து பரவுவதற்கான வாய்ப்புள்ள கொரோனா வைரஸ் மற்ற நாடுகளில் இருந்து அங்கிருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மூலம் இந்தியாவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதோ திருப்பதி லட்டு; அதுவும் இலவசமா - செம குஷியில் ஏழுமலையான் பக்தர்கள்!

எனவே முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றுக்காக, திருப்பதியில் உள்ள அரசு ரூயா மருத்துவமனையில் கொரோனா, பன்றி காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு துவக்கப்பட்டது.

இதுகுறித்து, இந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ரமணய்யா, "கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இங்கு தயார் நிலையில் உள்ளன.

புத்தூர் நகர வீதிகளில் நடிகை ரோஜா தலைமையில் தரமான சம்பவம்!!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை பற்றி பொதுமக்களுக்கு ஓரிரு நாட்களில் விரிவாக எடுத்துரைக்க இருக்கிறோம்" என்று கூறினார்.

அடுத்த செய்தி