ஆப்நகரம்

மோடியிடம் சரணடைந்த முதுகில்லாத தேர்தல் ஆணையம்: அர்விந்த் கெஜ்ரிவால் தாக்கு

தேர்தல் ஆணையத்திற்கு முதுகெலும்பு இல்லை என்றும், அதனால்தான் பிரதமர் மோடியிடம் சரணடைந்துவிட்டது என்றும், அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையாகச் சாடியுள்ளார்.

TNN 4 Feb 2017, 6:21 pm
தேர்தல் ஆணையத்திற்கு முதுகெலும்பு இல்லை என்றும், அதனால்தான் பிரதமர் மோடியிடம் சரணடைந்துவிட்டது என்றும், அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையாகச் சாடியுள்ளார்.
Samayam Tamil spineless ec has surrendered before pm modi says kejriwal
மோடியிடம் சரணடைந்த முதுகில்லாத தேர்தல் ஆணையம்: அர்விந்த் கெஜ்ரிவால் தாக்கு


இதுதொடர்பாக, கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது:

பஞ்சாப், கோவா மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் தொண்டர்கள், பல வாக்குச்சாவடிகளை நேரடியாக முற்றுகையிட்டு, அங்கும் வாக்கு சேகரிக்கின்றனர்.

இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இவர்களை தேர்தல் ஆணையமோ அல்லது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளோ தடுக்கவில்லை. தேர்தல் பிரசாரம் முடிந்து, வாக்குப் பதிவு நடைபெறும் நாளில், ஏன் இத்தகைய விதிமீறல்களை பாஜக.,வினர் செய்கிறார்கள்.

இதுவே மற்ற கட்சியினர் செய்திருந்தால், தேர்தல் ஆணையம் சும்மா விட்டிருக்குமா தேர்தல் ஆணையம் முதுகெலும்பில்லாத ஒன்றாக மாறிவிட்டது. அது பிரதமர் மோடியின் கையில் சிக்கிக் கொண்டுவிட்டது.

இவ்வாறு அர்விந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

Calling it "spineless", Delhi Chief Minister Arvind Kejriwal on Saturday alleged that the Election Commission has "completely surrendered" before Prime Minister Narendra Modi.

அடுத்த செய்தி