ஆப்நகரம்

காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதியைக் காட்டிக்கொடுத்து பழி தீர்த்த காதலி

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதி காலித்தை அவரது காதலி காட்டிக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 10 Oct 2017, 12:04 pm
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதி காலித்தை அவரது காதலி காட்டிக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil spurned lovers tip off helped track kill top jaish terrorist khalid
காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதியைக் காட்டிக்கொடுத்து பழி தீர்த்த காதலி


ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் காவல்துறைக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர் காலித் என்ற சாஹித் சௌகத். பாகிஸ்தானை சேர்ந்த இவர் கடந்த 3 வருடங்களாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் சார்பில் வடக்கு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்தார்.

அவர் நேற்று காஷ்மீர் சிறப்பு காவல் படையும் பாரமுல்லா பாதுகாப்புப்படை வீரர்களும் இணைந்து நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவர் காஷ்மீர் எல்லையில் உள்ள பாதுகாப்புப்படை முகாம்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இத்தாக்குதல் முன்னெடுக்க காலித் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு அவரது காதலி என்று கூறப்படும் பெண் ஒருவர் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. காலித் காஷ்மீரில் உள்ள பெண்கள் பலருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. காலித் விரித்த காதல் வலையில் விழுந்த பெண்களில் ஒருவர், ஒரு கட்டத்தில் காலித் தன்னை கைவிட்டுவிட்டதை உணர்ந்துள்ளார்.

இதனால், அவரை பிடிக்க போலீசாருக்கு உதவ முடிவுசெய்திருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட காஷ்மீர் போலீசார் அந்த பெண்ணும் காலித்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பேசிக்கொண்டவற்றைக் கொண்டு காலித் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு என்கவுண்டர் தாக்குதல் நடத்தப்படுவது காஷ்மீர் போலீசாருக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் புதிதானது அல்ல. ஏற்கெனவே, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அபு துஜானாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் இதே போன்ற என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

அடுத்த செய்தி