ஆப்நகரம்

ஆந்திரா: எண்ணெய் ஆலையில் விபத்து; ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின

Samayam Tamil 25 Dec 2019, 8:14 pm
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அனுபர்த்தி மண்டலத்தில் உள்ள பீரா ராமச்சந்திராபுரம் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீசக்கர எண்ணெய் ஆலை. இங்கு, இன்று அதிகாலை ஆலையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஆலை தீ பற்ற தொடங்கியது.
Samayam Tamil sri chakra oil mill fire


தொடர்ந்து பரவிய தீ, சிறிது நேரத்திற்குள்ளாகவே முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் எண்ணெய் ஆலையில் இருப்பில் வைத்திருந்த எண்ணெய் தீ பற்றியதன் காரணமாக தீயணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது ‌.

அருகிலிருக்கும் பயலர்களக்கு தீப்பற்றி பெருமளவில் சேதம் ஏற்படாதவாறு தொடர்ந்து தீயணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிஷ்டவசமாக தீப்பற்றிய சமயத்தில் தொழிலாளர்கள் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

அடுத்த செய்தி