ஆப்நகரம்

திருப்பதியை தொடர்ந்து இந்த கோயிலிலும் பக்தர்களுக்கு அனுமதி!!

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை மறுநாள் முதல் (ஜூன் 17) சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Jun 2020, 11:02 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து முக்கிய கோயில்களும் மூடப்பட்டன.
Samayam Tamil kalahasti


இரண்டு மாதங்களுக்கு மேல் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் கோயில்களில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைசசகம் மே 30 ஆம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, உவக பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 22) முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பதி: 83 நாட்களுக்கு பின் மீண்டும் பக்தர்களுக்கு காட்சியளித்த ஏழுமலையான்!!

இதைத்தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மற்றொரு கோயிலான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலின் நாளை மறுநாள் முதல் (ஜூன் 17) சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் தவறாமல் முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும், அவர்கள் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், வழக்கமான பக்தர்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் பேர்தான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா? இதோ இலவச டோக்கன் - விதிகளை மீறி குவிந்த பக்தர்கள்!

சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப்பூஜை விஷயமானது. இந்த பூஜையும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி