ஆப்நகரம்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் உடல் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது

அமெரிக்காவில் உள்ள கன்சாசில் இனவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லாவின் உடல் ஹைதராபாத்தில், ஜுப்ளி ஹில்ஸில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

TOI Contributor 28 Feb 2017, 12:29 pm
அமெரிக்காவில் உள்ள கன்சாசில் இனவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லாவின் உடல் ஹைதராபாத்தில், ஜுப்ளி ஹில்ஸில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.
Samayam Tamil srinivas kuchibhotla funeral held at mahaprasthanam cremation ground in jubilee hills
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் உடல் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது


அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் ஒலாத்தேவில் கார்மின் என்ற நிறுவனத்தில் ஜிபிஎஸ் உருவாக்கும் பொறியாளராகப் பணியாற்றியவர் ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லா. வயது 32. இவர் ஹைதராபாத்தில் உள்ள பச்சுபள்ளி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் தனது நண்பர் அலோக் மாதசாணியுடன் (தெலங்கானாவைச் சேர்ந்தவர்) அங்குள்ள மதுபான விடுதிக்கு கடந்த புதன்கிழமை இரவு சென்றார். அங்கு வந்த அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் ஆடம் புரின்டோன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் ஸ்ரீநிவாஸ் பரிதாபமாக இறந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டை தடுக்க முயற்சித்த அமெரிக்க இளைஞர் கிரில்லட் மற்றும் அலோக் மாதசாணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ''எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் பயங்கரவாதிகளே'' என்ற கத்தியவாறு ஆடம் துப்பாக்கியால் சுட்டதாக அங்கி இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏறபடுத்தி இருந்தது. ஹிலாரி கிளிண்டன் உள்பட பல்வேறு அமெரிக்கத் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக ஹைதராபாத் கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து காலை 11.30 மணிக்கு ஜுப்ளி ஹில்ஸில் உள்ள மகாபிரஸ்தனம் மின் மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.

Srinivas Kuchibhotla funeral held at Mahaprasthanam cremation ground in Jubilee Hills

அடுத்த செய்தி