ஆப்நகரம்

மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

பாரிகரின் மறைவு எனக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரது மறைவை அடுத்து அவரது குடும்பத்தார், நண்பர்கள், கட்சி உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Mar 2019, 11:26 pm
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு திங்கட்கிழமையன்று தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil m.k. stalin dmk.


மூன்று முறை கோவா முதல்வராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் 63 வயதில் ஞாயிற்றுக்கிழமை பனாஜியில் உள்ள தன் இல்லத்தில் காலமானர். அவருக்கு தலைவர்களும் பிரபலங்களும் பொதுமக்களும் இரங்கல் தெரிவிக்கிறார்கள்.

பாரிக்கர் மறைவை முன்னிட்டு திங்கட்கிழமை (நாளை) மத்திய அமைச்சரவை சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. தேசிய தலைநகரம், மாநில தலைநகரங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் திங்கட்கிழமை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பாரிக்கரின் உடல் நாளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பனாஜியில் உள்ள கலா அகாடமியில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். பின் கம்பலில் உள்ள எஸ்.ஏ.ஜி. மைதானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் பாரிக்கரின் உடல் அங்கேயே தகனம் செய்யப்படும்.

கோவா முதலைமைச்சர் மனோகர் பாரிகரின் மறைவு எனக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரது மறைவை அடுத்து அவரது குடும்பத்தார், நண்பர்கள், கட்சி உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி