ஆப்நகரம்

மாநில தேர்தலும், மக்களவை தேர்தலும் ஓரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் - அருண்ஜெட்லி

மாநில தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

TNN 9 Mar 2017, 11:34 am
டெல்லி : மாநில தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil state elections and the parliamentary elections should be held at the same time arunjetli
மாநில தேர்தலும், மக்களவை தேர்தலும் ஓரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் - அருண்ஜெட்லி


டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தேர்தலின் போது மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதால், அரசின் நிர்வாகமும், செயல்பாடுகளும் செயலற்றுப்போவதாக கூறினார். ஒரே நேரத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும், மக்களவைத் தேர்தலையும் நடத்தினால் தேர்தல் பிரச்சாரம் பொதுவாக அமையும் என்று குறிப்பிட்ட அருண்ஜெட்லி, அரசியல் கட்சிகளின் பிரச்சார செலவு குறையும் என்றும் தெரிவித்தார்.

எனவே, ஒரே நேரத்தில் இரு அமைப்பு தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் அவசியம் என்றும், இதனையே பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருவதாகவும் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

அடுத்த செய்தி