ஆப்நகரம்

பொதுத்தேர்வு ஒத்திவைப்பு: மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

பொதுத் தேர்வை ஒத்திவைப்பதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 May 2021, 5:27 pm
கொரோனா பரவல் காரணமாக ஆந்திராவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil exam postponed


கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவிவருகிறது. இந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்பிலேயே சென்றுவிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டாவது நேரடி வகுப்புகள் நடக்குமா என்பதை உறுதிபட யாராலும் கூறிவிட முடியவில்லை.
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு? முதல்வர் எடுத்த முடிவு இதுதான்!
இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் 12ஆம் வகுப்பு தவிர பிற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். 12 ஆம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவது என மத்திய, மாநில அரசின் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

ஆந்திர மாநில அரசோ பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யாத நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆந்திர மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தேர்வு தொடர்பாக ஜூலை மாதம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி