ஆப்நகரம்

தமிழ் தினம் கொண்டாடனும்; மோடி

பிற மாநில கல்லூரிகளில் தமிழ் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

TNN 12 Sep 2017, 6:35 am
பிற மாநில கல்லூரிகளில் தமிழ் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Samayam Tamil state sholud celebrate other state cultural through instituition says pm modi
தமிழ் தினம் கொண்டாடனும்; மோடி


சுவாமி விவேகாந்தர், சிகாககோ மாநாட்டில் பேசியதன் 125 ம் ஆண்டு விழா மற்றும் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

அப்போது மாணவர்களிடையே பேசிய மோடி,

“கல்லூரிகளில் எத்தனயோ தினம் கொண்டாடுகிறார்கள். இருக்கட்டும். அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் பிற மாநிலத்திலுள்ள கலாச்சார பண்பாட்டையும் கொண்டாடலாம்.

எடுத்துக்காட்டாக, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்லூரியில் கேரளா தினம் கொண்டாடலாம், அரியானா மாநிலத்தில் உள்ள கல்லூரியில் தமிழ் தினம் கொண்டாடலாம். இந்த தினத்தில், அம்மாநில கலாச்சார பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் பாடல்கள் பாடி, அவர்களைப் போன்றே உடை உடுத்தலாம்.


இதுபோன்ற ஒரு கலாச்சார பண்பாட்டை பகிரந்து கொண்டால், ஒரே இந்தியா, மாபெரும் இந்தியாவாக உருவாக்க முடியும்”

என்று பிரதமர் மோடி கூறினார்.

அடுத்த செய்தி