ஆப்நகரம்

அதுக்குள்ளேயேவா? இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு!

உத்தரப்பிரதே மாநிலத்தில் அம்பேத்கர் சிலைக்கு கூண்டு வளையத்தில் போலீசார் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

Samayam Tamil 12 Apr 2018, 8:11 pm
Samayam Tamil br
உத்தரப்பிரதே மாநிலத்தில் அம்பேத்கர் சிலைக்கு கூண்டு வளையத்தில் போலீசார் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

வரும் 14ம் தேதி சட்டமேதை அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் கொண்டாடயிருக்கிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் புதௌன் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீசார் இரும்பு வளைய கூண்டு பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும், அதனருகிலேயே பாதுகாப்பிற்காக அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக திரிபுராவில் லெனின் உலை உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரியார் சிலையும் உடைக்கப்பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது அம்பேத்கர் சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி