ஆப்நகரம்

நாகப்பட்டினம்: இந்த ஆண்டு திருக்கடையூர் ரேக்ளா ரேஸுக்குத் தடை

ரேக்ளா ரேஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்குக் காப்பீடு செய்யாமல், விலங்குகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமல், அரசியல் பிரமுகர்களின் சுயலாபத்திற்காக போட்டிகள் நடத்தப்படுகின்றன.”

Samayam Tamil 13 Jan 2020, 9:19 pm
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் நெடுஞ்சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்துவதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Samayam Tamil rekla-race


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சமயத்தில் ஜனவரி 17ஆம் தேதி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் உள்ள நெடுஞ்சாலையில், குதிரை மற்றும் மாடுகளை வைத்து ரேக்ளா ரேஸ் தொடர்ச்சியாக நடத்தப்படும். அவ்வகையில் இந்த ஆண்டும் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு நடத்தக்கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சங்கமித்ரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதாவது, “ரேக்ளா ரேஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்குக் காப்பீடு செய்யாமல், விலங்குகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமல், அரசியல் பிரமுகர்களின் சுயலாபத்திற்காக போட்டிகள் நடத்தப்படுகின்றன.”

விலங்குகள் பாதிக்கப்படுவது, போக்குவரத்து தடைபடுவது, கோஷ்டி மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இது காரணாமாக அமைவதால், இந்தப்பகுதியில் ரேக்ளா ரேஸுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்கப்பட்டிருந்தது.

மேலும், மயிலாடுதுறை பகுதியில் இதேபோல ரேக்ளா ரேசுக்குத் தடை செய்யப்பட்டது போன்று இங்கும் தடை விதிக்க வேண்டும் என்றும், அதையும் மீறி ரேஸ் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதற்குப் பதில் அளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், ''கடந்த ஆண்டு தரங்கம்பாடியில் ரேக்ளா ரேஸ் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதால், அதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' எனவும் கூடுதலாகத் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஆண்டு ரேக்ளா ரேஸ் நடத்தத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி