ஆப்நகரம்

ரெண்ட சமாளிக்கிறதுனா சும்மாவா?

தன்னுடைய இரண்டு மனைவிகளுக்காக 25 வாகனங்களுக்கு மேல் திருடி, விற்றவர் போலீசில் பிடிபட்டார்.

TNN 11 Jul 2016, 4:29 pm
பெங்களூரு: தன்னுடைய இரண்டு மனைவிகளுக்காக 25 வாகனங்களுக்கு மேல் திருடி, விற்றவர் போலீசில் பிடிபட்டார்.
Samayam Tamil stole scooters to maintain two wives
ரெண்ட சமாளிக்கிறதுனா சும்மாவா?


கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் முரளி ராமராவ். கூலித் தொழிலாளியான இவர், இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றன. இவர் ஒவ்வொரு முறை தனது மனைவிகளைச் சந்திக்க செல்லும் போதும், ஏதாவது ஒரு வாகனத்தை திருடிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி, மந்திரி மால் எதிரேயுள்ள உணவு விடுதியில் “Hondo Dio" வாகனத்தை திருட முயற்சித்த போது, பிடிபட்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 25க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து ராமராவிடம் விசாரித்ததில், தனது இரண்டு குடும்பங்களை காப்பாற்றவே திருடியதாக கூறியுள்ளார். வேறு எதுவும் தனக்கு தொழில் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி