ஆப்நகரம்

கெத்து காட்டிய டெல்லி: லாக் டவுண்ணுக்கு எண்ட் கார்டு போட்ட கெஜ்ரிவால்

டெல்லியில் பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பொது முடக்கத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jul 2020, 6:56 am
கொரோனா பாதிப்பும் பலி எண்ணிக்கையும் இந்தியளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜூலை 31க்கு பிறகு பொது முடக்கம் மேலும் நீட்டிக்கப்படுமா, அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil kejriwal


இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. கடந்த மாதத்தில் டெல்லியில் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வந்த நிலையில் டெல்லியே தேசிய அளவில் இரண்டாம் இடம் வகித்தது. ஆனால் அங்கு இந்த மாதம் பாதிப்பு, பலி எண்ணிக்கை வேகம் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

விரிவான மருத்துவ பரிசோதனைகள், ஆக்ஸிமீட்டர், விரைவான ஆம்புலன்ஸ் திட்டம், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் தயார்படுத்துதல், அவசர சிகிச்சை மையங்களில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல் ஆகியவற்றை சரியாக நடைமுறைப்படுத்தி கொரோனா பரவலைக் குறைப்பதில் ‘டெல்லி மாடல்’ என்று இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் உலக நாடுகளுக்கும் தமது மாநிலம் முன் மாதிரியாக செயல்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Arvind Kejriwal: ஒரே மாதத்தில் ஆச்சரியம்; கோவிட்-19ஐ எப்படி சமாளித்தது டெல்லி?

“அடுத்த கட்ட பொது முடக்கத்துக்கு அவசியமில்லை. திருப்தியளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.



டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “டெல்லியில் ஒரு வாரம் காலத்திற்கு கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர தெரு வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், அடுத்த உத்தரவு வரும் வரை வார சந்தை அனுமதிக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயந்தால் பசியாறுமா? கோரோனா மருத்துவக் கழிவுகளில் ரிஸ்க் எடுக்கும் தொழிலாளர்கள்!

கொரோனா பொது முடக்கத்தால் பொருளாதாரம் பெருமளவு சரிவைச் சந்தித்துள்ள நிலையில் பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் பணியாளர்கள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளது. இந்தப் பிரச்சினையைப் போக்க டெல்லி அரசு முன்வந்து http://jobs.delhi.gov.in/ என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் வேலை தேடுபவர்களும், வேலைக்கு ஆள்கள் வேண்டியவர்களும் தங்கள் விவரங்களை பதிவேற்றலாம்.

அடுத்த செய்தி