ஆப்நகரம்

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சித்தராமையா எச்சரிக்கை

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.

TNN 13 Sep 2016, 8:01 am
பெங்களூரு: வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
Samayam Tamil strict action who involves violation siddaramaiah warns
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சித்தராமையா எச்சரிக்கை


தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதனைத்தொடர்ந்து, கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு நேற்று வெளியானதில் இருந்து அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக வாகனங்கள் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

pic.twitter.com/inWQpocV8R— CM of Karnataka (@CMofKarnataka) September 13, 2016
இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்து கர்நாடகாவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவின் மூலம் அம்மாநில முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார். காவிரி விவகாரத்தில் கர்நாடக, தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அவர், இந்த விவகாரத்தில் கர்நாடக மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி