ஆப்நகரம்

இளம் மாடல் தூக்கிட்டு தற்கொலை

மும்பையில் மாடலிங் துறையில் முன்னேற நினைத்த இளம் மாடல் கரம்ஜீத் கவுர், தந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

Maharashtra Times 14 Jul 2016, 5:12 pm
Struggling model commits suicide in Mumbai இளம் மாடல் தூக்கிட்டு தற்கொலை
Samayam Tamil struggling model commits suicide in mumbai
இளம் மாடல் தூக்கிட்டு தற்கொலை


மும்பை: மும்பையில் மாடலிங் துறையில் முன்னேற நினைத்த இளம் மாடல் கரம்ஜீத் கவுர், தந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

கரம்ஜீத் கவுர் (25), வீட்டு ஃபேனில் நள்ளிரவு 12 மணியளவில் தற்கொலை செய்துக் கொண்டார். தில்லியிலிருந்து ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மும்பையில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், வெளியே சென்றிருந்த கரம்ஜீத்தின் தோழி வீடு திரும்பும் போது, கரம்ஜீத் அறையின் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு இருந்ததாகவும், நீண்ட நேரமாக அழைத்தும் எவ்வித பதிலும் இல்லாததையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கரம்ஜீத் தூக்கில் தொங்கியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் முதல்கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர். எனினும், கரம்ஜீத்தின் தற்கொலைக்கான உரிய காரணம் குறித்து எவ்வித தகவலும் தெரியவரவில்லை.

அடுத்த செய்தி